காசு இங்கே, இயேசு எங்கே
நான் இந்த நாவலை எழுதுவதர்க்குக் காரணம் போதகர்கள், பாஸ்டர்கள், பிரதர்கள், செய்யும் அட்டுழியங்களும், அடாவடிகளும், அநியாயங்களும்தான்.
"உள்ளதை உள்ளது என்று சொல்லுங்கள். இல்லாததை இல்லாதது என்று சொல்லுங்கள்" என்று இயேசு கூறியிருக்கிறார். அவருடைய வாக்கின் படியேதான் இதை எழுதியிருக்கிறேன்.
67 ஆண்டுகளாக கிறிஸ்தவனாக நான் இருந்தும் இந்தப் பணியைச் செய்யாவிட்டால் கிறிஸ்தவ எழுத்தாளர் வேறு யார்தான் செய்யப் போகிறார்கள்?
தசமபாகம் வாங்கும் பாஸ்டர்கள்
மார்டின் லூதருக்கு முன்பு போப் எப்படி பாவச் சீட்டுக்குப் பணம் வாங்கினாரோ, அதேபோல் தான் பாஸ்டர்களும் தசம பாகம் (வருமானத்தில் 10 சதவிகிதம்) என்ற பெயரில் கிறிஸ்தவர்களிடம் பிடுங்கித் தின்கிறார்கள். பணத்தைப் பட்டப் பகலிலே கொள்ளை அடிக்கிறார்கள்.
டாக்டர் புஷ்பராஜின் அறிவான கேள்வி
கிறிஸ்துவ போதகர்களையும் பாஸ்டர்களையும் சகோதரர்களையும் ஆணித்தரமான கேள்விகளால் துளைத்து எடுக்கிறார் டாக்டர் புஷ்பராஜ். இவர் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற முடியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
பல பாஷை பேசுவதனால் கிறிஸ்தவர்களுக்கு எந்த வித பயனும் ஏற்படப் போவது இல்லை. வாய்க்கு வந்தபடி உளறுவதுதான் பல மொழி. இதனால் எந்த விதமான் முன்னேற்றமும் கிறிஸ்தவர்களுக்கு ஏற்படாது என்கிறார்.
புஷ்பராஜ் நடத்தும் ஜாமக்காரன் பத்திரிக்கையில் வரும் ஒவ்வொரு கட்டுரையும் சிந்தித்துப் பார்க்கும்படி இருக்கிறது. இதனை எத்தனை கிறிஸ்தவர்கள் உணந்து இருக்கிறார்கள் ?
ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னைத் தானே ஆராய்ந்து பார்ப்பது அவனுடைய முன்னேற்றத்திற்கு வழி காட்டும். அப்பொழுது தான் நாம் நடந்து சென்று கொண்டிருக்கும் பாதை சரியானதுதானா என்பது புலப்படும்.
மற்றபடி எனக்கு யார் மீதும் எந்த தவறான எண்ணமும் இல்லை என்று அறுதியிட்டு கூறுகிறேன்.
இப்படிப் பட்ட ஒரு நூல் வெளிவர இருப்பதை அறிந்ததும், குறிப்பாக கிறிஸ்தவ நண்பர்களும், ரெவரண்டுகலும் வாழ்த்தினைத் தெரிவித்தார்கள். அன்புக் கரங்களைக் கொடுத்து கைக்குலுக்கிகினார்கள். அவர்கள் அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
வளர் தொழிலில் (செப்டம்பர் 2014, பக்கங்கள் 36, 37, 38, 39) எழுதப்பட்ட "காசு இங்கே, இயேசு எங்கே" விமர்சனம் :
தசமபாகம் :
ஏழை கிறிஸ்தவர்களிடம் பணம் பறிக்கும் பாஸ்டர்கள் மெர்வின் கொந்தளிப்பு
ஆண்டவனைப் பற்றி கூறி காசு பறிக்கும் கிறிஸ்தவ பாஸ்டர்களை, போதகர்களை, பிரதர்களை எண்ணிப் பார்க்க வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையும், கட்டாயமும் ஆகும்.
எதற்கு ஆராய்ந்துப் பார்க்க வேண்டும் என்றால் ஒவ்வொரு பாஸ்டர்களும் கோடிக் கணக்கான பணத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது?
இவர்களால் நாட்டுக்கு என்ன பயன்? கிறிஸ்துவ சமுதாயத்திற்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்! யாருடைய முன்னேற்றத்திற்கு இவர்கள் பாடுபட்டிருக்கிறார்கள்? இந்த கேள்விக்கு என்ன பதிலை கூறுவார்கள்?
இயேசுவைப் பற்றி கூறினால் காசு கொட்டுகிறது என்ற நிலையை அறிந்து கொண்டதும் அதிலேயே நிலைத்து நிற்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் தங்களுடைய வாரிசுகளையும் இந்த நிலைக்கு உட்படுத்துகிறார்கள்.
பணத்தின் மேல்தான் பாஸ்டர்களுக்கு பாசமே தவிர இயேசுவிடமும் இல்லை. கிறிஸ்தவர்களிடமும் இல்லை. பணத்தைப் பற்றிப் பேசாத ஒரு பாஸ்டர் உண்டா?
மார்டின் லூதருக்கு முன்பு போப் எப்படி பாவச் சீட்டுக்கு பணம் வாங்கினாரோ, அதேபோல் தான் பாஸ்டர்களும் தசமபாகம் என்ற பெயரில் கிறிஸ்தவர்களிடம் பிடுங்கித் தின்கிறார்கள். பணத்தைப் பட்டப்பகலில் கொள்ளை அடிக்கிறார்கள்.
ஒரு கிறிஸ்தவனாவது பாஸ்டர்கள் வாங்கும் தசம பாகத்தைப் பற்றி கண்டித்தது உண்டா? கேள்வி கேட்டு இருக்கிறார்களா? மெர்வினை தவிர!
இதற்கு சரியான சான்று: சின்ன மலையில் இருக்கும் பாஸ்டர் மோகன். இவர் ஆரம்பத்தில் எப்படி இருந்தார், இப்பொழுது எப்படி இருக்கிறார் என்று ஆராய்ந்தாலே போதும் எல்லாமே வெட்ட வெளிச்சமாகும்.
எப்படி இந்த வாழ்க்கை இவருக்குக் கிடைத்தது? எல்லாம் தசமபாகம் தந்த பலன் தான்."ஒருவன் என்னைப் பின்பற்றி வர வேண்டுமானால் எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கக் கடவன்" என்கிறார் இயேசு.
தாங்கள் சுக போகமாக வாழ எளிய கிறிஸ்தவர்களின் தசமபாகம் வாங்குவதும் வெட்கம் இல்லாமல் பிச்சை கேட்பதும் இவர்களுக்கு யாரும் சொல்லித்தர வேண்டியது இல்லை.
இயேசுவை காட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் யூதாஸ்கரியத் வரிசையில் பலரும் நிற்கிறார்கள். அவர்களில் ஒருவன் மோகன் சி.லாசரஸ். இவர் நடத்தும் பத்திரிகையின் பெயர் இயேசு விடுவிக்கிறார்.
இந்த கபடதாரி பேசும் பொய்க்கு அளவே இல்லை. இந்த அண்ட புளுகன், அகாச புளுகன் சாயர்புரத்தில் நடத்திய கூட்டத்தில் கேன்சர் நோயாளி குணமானான் என்றார்.
கேன்சர் நோய் குணமாகிவிட்டது என்பதற்கு எந்த டாக்டர் சர்டிபிகேட் கொடுத்தார் என்று சேலம் டாக்டர் புஷ்பராஜ் கேட்டார். இந்த அண்ட புளுகனால் பதில் சொல்ல முடியவில்லை. இவருக்குப் பிள்ளை இல்லை. ஆனால் அவர் கூட்டத்தில் பேசும்பொழுது கிடைக்க ஜெபம் செய்வார்.
இதோ இன்னொரு மோடி மஸ்தான் யூதாஸ்கரியத் சாது செல்வராஜ். அவர் அண்டத்துக்கும் ஆகாயத்திற்கும் பொய் சொல்பவர்.
எப்படி என்றால் இயேசுவை மேல் உலகத்திற்கு சென்று பார்த்தாராம். இயேசு, ராஜாவைப் போல் வீற்றிருந்தாரம் அவரிடம் பேசிவிட்டு வந்தாராம். அவருடன் உட்கார்ந்து சாப்பிட்டாராம்!
இதுவரை இப்படிப்பட்ட பொய்யைக் கேட்டதே இல்லை. இயேசு போல் ஆடை அணித்து தலைமுடி வைத்து இருந்தால் இயேசுவாகி விட முடியுமா? இயேசுவை அடிக்கடி மேல் உலகத்திற்குப் போய் பார்த்து பேசிவிட்டு வருகிறேன் என்று கூறுவதை நம்ப முடிகிறதா?
எஞ்சல் டிவியை ஆரம்பித்தார். கொஞ்சம் நாட்களுக்குள் அந்த டிவியை மூடினார். ஏன் டிவியை மூடிவிட்டீர்கள் என்று கேட்டதற்கு "இயேசு டிவியை மூடும்படி கூறினார்" என்றார்.
இவரைப் போல அடுத்த பொய்க்காரக் கொள்ளையன் கோவையில் இருக்கும் ஜவகர் சாமுவேல். அவர் கனடா நாட்டிற்கு போய் இருந்தார். அங்கு ஒரு கூட்டத்தில் பேசினார். அங்கு சூம்பி போன கையுடன் ஒருவன் இவர் ஜெபம் செய்த உடனேயே சூம்பி போன கை உடனே நல்ல கையாகி விட்டதாம்.
கூடத்திற்கு வந்த நபருக்கு பிறந்ததில் இருந்து கை சூம்பி தான் இருந்தது. இங்கு இப்படிப் பட்ட பொய்யை அவர் கூற வில்லை. கனடா நாடு என்றால் யாரும் அங்கு போய் விசாரிக்க முடியாது அல்லவா !
இங்கு இயேசுவை வியாபாரம் செய்யும் அதனை பாஸ்டர்களும் அடுத்தவனுக்கு ஒரு ருபாய் கூட தரமாட்டார்கள். தனக்கும் தன மனைவியும் பிள்ளைகளுக்கும் பணமும் சொத்தும் சேகரித்து வைபதிலேயே கவனமாக இருப்பார்கள்.
பொரித்து வைத்திருக்கும் மீனை எப்படி பூனை பார்த்து கொண்டு இருக்குமோ, அப்படியே அவர்களும் அடுத்தவன் பணத்தை தசம பாகம் என்ற பெயரில் திருடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
பாஸ்டர் மகன்கள் எல்லாம் அமெரிக்காவில் மருத்துவராகவும் பொறியாளராகவும் ஐ.டி .யிலும் வேலை செய்கிறார்கள். இவர்கள் படிப்பதற்கும் அயல் நாட்டில் வாழ்வதற்கும் எங்கிருந்து பணம் வந்தது?
கிறிஸ்தவர்களிடம் தசமபாகம் என்று கொள்ளை அடிப்பதையே தொழிலாக வைத்துக் கொண்டு பகலில் திருடும் திருடர்கள் இவர்கள்.
தினகரன், தன்னுடைய மகன் பால் தினகரனை வாரிசாக இதே தொழிலைச் செய்யும்படி வழிவகுத்துக் கொடுத்தார்.
பால்தினகரனும் தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் இதே தொழிலைச் செய்ய பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
பால்தினகரனும் அவருடைய அப்பாவைப் போலவே அழுவதும், பாடுவதும் பணம் கேட்பதும் தொழிலாகிவிட்டது.
எதற்கு கூட்டத்தில் பேசும் பொது அழ வேண்டும்? இது பற்றி ஒரு கிறிஸ்தவாவராவது கேள்வி கேட்டு இருப்பாரா? கூட்டத்தில் அழுவது ஒரு வகையான மெஸ்மரிசம், ஹிப்னாட்டிசம்.
இப்படி அழுவதால்தான் கூட்டத்தில் இருப்பவர்களையும் அழவைத்து காசு பறிக்க முடியும். இந்தக் கலையை நன்கு கற்று இருந்தவர் பால்தினகரன்.
சாது செல்வராஜ் சொல்லும் பொய்க்கு ஒரு அளவே இல்லை. 2004 ஆம் ஆண்டு சுனாமி வந்தது. ஆனால் இவருக்கு மட்டும் சுனாமி வரப் போகிறது என்று இயேசு சொன்னாராம். ஆனால் இவர் சுனாமி வரப்போகிறது என்று யாரிடமும் சொல்லவில்லை.
பத்திரிக்கையிலும் இந்த செய்தியை வெளியிடவில்லை. மக்களிடமும் இதனைத் தெரிவிக்கவில்லை. இவர் மட்டும் முன் எச்சரிகையகத் தெரிவித்து இருந்தால் பல்லாயிரக் கணக்காக மக்கள் மடிந்து போய் இருக்க மாட்டார்கள். கோடிகணக்கான பொருட்கள் நாசமாகி பொய் இருக்காது. அனால் இவர் முன் அறிவிப்பு செய்யவில்லை. சுனாமி வந்துவிட்டு போன பிறகு இந்தக் கட்டுக் கதை பொய்யை அவிழ்த்து விடுகிறார்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக வராத இயேசு நாளை வந்து விடுவாரா? ஒரு நாளும் இயேசு வரமாட்டார். இது குறித்து ஒரு கிறிஸ்தவனாவது சிந்தித்துப் பார்த்து இருப்பானா?
இயேசு வருவார் என்று கூறி கொள்ளை அடிக்கும் பாஸ்டர்கள் எப்பொழுது திருந்துவார்கள்?
கிறிஸ்தவர் களுக்கே உரித்தான மூடத்தனமும் மடத்தனமும் மனதின் ஆழத்திலே பதிந்து கிடக்கிறது. அதனை மனதில் இருந்து வெளியேற்றியே ஆக வேண்டும்.
பாஸ்டர்களும், சகோதரன்களும் நடத்தும் பத்திரிகைகள் ஏராளம். ஒரு பத்திரிகையாவது பயனுடையதாக இருக்கிறதா? தங்களுடைய குடும்ப போட்டோவை வெளியிடுவதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும்.
பால் தினகரனின் இயேசு அழைக்கிறார் இதனைப் பார்த்தாலே இந்த உண்மை வெளிப்படையாகத் தெரியும்.
தினகரன், பால்தினகரன், ஸ்டெல்லா தினகரன், பால்தினகரன் மனைவி, மூன்று பிள்ளைகள் இவர்களுடைய போட்டோ இல்லாத இயேசு அழைக்கிறார் இத்தாலே கிடையாது.
இதே போல்தான் ஒவ்வொரு பாஸ்டர் நடத்தும் பத்திரிகையும் இருக்கும். இவர்களுடைய குடும்ப போட்டோவை ஒவ்வொரு கிறிஸ்தவனும் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? அதனால் என்ன பயன்?
இவர்கள் நடத்தும் பத்திரிகையில் அறிவான விஷயம் ஏதாவது இருக்கிறதா? என்று பூதக் கண்ணாடி வைத்து தான் பார்க்க வேண்டும். எல்லாம் குப்பையான விஷயங்கள்.
மோகன் சி.லாசரசிக்கு ஐயாயிரம் கொடுத்தவுடன் இயேசு உடனே அந்த நபருக்கு முப்பது லட்சம் கொடுத்தார் என்ற பொய்யான சாட்சி ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும்.
இயேசு கொடுப்பதற்கு மோகன் சி.லாசரசிக்கு என்ன கமிஷன் ஏஜென்டா? பொய்யான தகவலை வாரி வழங்குவதில் வல்லவர்கள். இயேசுவின் பெயரச் சொல்லியே எதனை பத்திரிக்கைகள்?
தினகரன் நடத்தும் கூட்டங்களில் வியாதியைக் குணப்படுத்துவதாக கூடாரம் போட்டுக் கூட்டத்தில் ஆட்களைத் தயார் செய்து பெயர் சொல்லி அழைப்பார் .
பெயர் சொல்லப்பட்டவர்களும் மேடைக்கு வந்து, எனக்கு இருந்த தலைவலி போய் விட்டது. காய்ச்சல் போய் விட்டது என்று அறிக்கை விடுவார்கள்.
அப்படியானால் இருதய நோயாளிகளை உங்கள் ஜெபத்தால் ஏன் குணமாக்க முடிய வில்லை?
தினகரனுக்கே மஞ்சள் காமாலை நோய் வந்து சென்னை விஜயா ஆஸ்பத்திரியில் படுக்க வேண்டியது ஏன்?
இயேசுவைக் கண்ணால் காட்டுகிறார். ஆண்டவனுடன் பேச வழி செய்கிறார். பரலோகத்தைப் பார்க்க வைக்கிறார்.
இப்படிப் பொய்யான பிரசாரத்தை கிறிஸ்தவர்களிடம் கூறிப் பல கோடி ரூபாய்களை கொள்ளையடித்தவர் ஜோஷ்வா டேனியல்.
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் லேமேன்ஸ் இவான் ஜிலிக்கல் பெல்லொசிப் என்ற அமைப்பை வைத்துக் கொண்டு கோடிக் கணக்கில் பணத்தை அபகரித்தார், டேனியல். அடுத்தவன் பொருளின் மீது ஆசைப்பட்டு அதனை எடுக்காதே என்பது இயேசுவின் பொன்மொழி. நல்ல போதனையை கல்லறையாக்கி சில்லறையை சேர்த்துக் கொண்டவர் இவர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சத்தியா பிள்ளை என்பவருடைய இடத்தில கூடாரம் போட்டுக் கூட்டம் நடத்திப் பணம் வசூல் செய்தார் ஜோஷ்வா .
அந்த இடத்தை அப்படியே தன்வசம் ஆக்கிக் கொள்ள விரும்பினார். அதனை விட்டுப் போக முடியாது என்று வீம்பு பேசினார்.
இடத்தின் உரிமையாளர் சட்டத்தின் துணைகொண்டு நீதிமன்றந்தின் மூலம் நடவடிக்கை எடுத்து டேனியலை வெளியே துரத்தினார்.
இவருடைய கூட்டத்தில் இளைஞர்களும், கன்னிகளும், ஏராளமாக இருபதற்குக் காரணம் தாராளமாக சோஷியலாக பழகலாம் என்பது தான். இயேசுவின் பெயரைச் சொல்லி இளைஞர்கள் அடிக்கும் கும்மாளத்திற்கு இங்கு அளவே இல்லை.
டேனியல் ஒரு கள்ளத்தனமான் தரிசி என்பதற்கு இதோ ஒரு எடுத்துக் காட்டு. இவருடைய தந்தை இறந்து விட்டார். இயேசு பெருமான் உயிர்த்தெழுந்ததைப் போலவே ஜோஷ்வா டேனியலின் தந்தையும் உயிர் பெற்று எழுவார் என்று மூட நம்பிக்கையை கூட்டத்தாரிடம் பரப்பினார்.
தன் தந்தை, சவமாகிய பின்னும் பங்களாவின் நடுவில் பிணத்தை வைத்தார். மூன்று நாட்கள் ஆன பின்பும் பிணம் உயிர் பெற்று எழவில்லை.
இந்த செய்தி அரசாங்கத்திற்கு எட்டவே உடனே பிணத்தை அகற்றும்படி அரசாங்கம் உத்தரவு போட்டது.
அந்த ஆணைக்குக் கீழ் படிந்து நாலாவது நாளில் அடக்கம் செய்து அயோக்கிய தன்மை டேனியாளைத் தவிர வேறு எவருக்குமே கிடையாது.
பாஸ்டர் சுந்தரம் புரசைவாக்கம் வீராசாமி தெருவில் அப்போஸ்தல கிறிஸ்துவ சபை என்ற கூட்டத்தை வைத்துக் கொண்டு தசமபாகம் வாங்கும் பணப்பித்துப் பிடித்த பேராசைக்காரர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெபம் செய்து கொண்டிருக்கும் பொழுதே எனக்கு இன்று ஆயிரம் ருபாய் வேண்டும் என்று பாத்து தடவை திருப்பிக் கூறிப் பணம் கேட்டு வாங்குகிறார். இப்படி கேட்கிறோமே என்று வெட்கப்படுவதே இல்லை.
பணம் பறிப்பதில்தான் இவருடைய கவனம் முழுவதும் இருக்கிறது. இவ்விதம் வாங்கிய பணத்தில்தான் ஆடம்பர பங்களாவிலும் அழகிய காரிலும் உலா வர முடிகிறது.
தசமபாகம் வாங்குவதின் மூலமாகவும் பலரிடம் கேட்டு வாங்கும் பணத்திலும் தான் லட்சாதிபதியாக விளங்குகிறார் சுந்தரம்.
இவருடைய கூட்டத்திற்கு வருபவர்கள் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டும்.
கிறிஸ்தவ போதகர்களையும் பாஸ்டர்களையும் சகோதர்களையும் ஆணித்தரமான கேள்விகளால் துளைத்து எடுக்கிறார் டாக்டர் புஷ்பராஜ். இவர் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற முடியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
புஷ்பராஜ் நடத்தும் ஜாமக்காரன் பத்திரிகையில் வரும் ஒவ்வொரு கட்டுரையையும் சிந்தித்துப் பார்க்கும்படி இருக்கிறது. இதனை எத்தனை கிறிஸ்தவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்!
இதில் கூறப்பட்டிருக்கும் எல்லா செய்திகளும் வெளிப்படையான உண்மையாகும். இயேசுக்கு ஊழியம் செய்கிறேன் என்று பொய் சொல்லி ஏமாற்றும் பாஸ்டர்கள் போல் கபட நாடகம் இதில் கிடையவே கிடையாது.
உள்ளதை உள்ளது என்று சொல்லுங்கள் என்று இயேசுவின் வார்த்தையின் படியான உரைக்கப் பட்டிருக்கிறது.
காசு இங்கே, இயேசு எங்கே (176 பக்கங்கள்)
விலை ரூ 100/- (கூரியர் சார்ஜ் தனி)
தொடர்புக்கு :
மெர்வின்
911, முதல் மெயின் ரோடு
முகப்பேறு ஏரித்திட்டம்
முகப்பேறு மேற்கு
சென்னை 600 637
செல் : 93827 18678
.